Thursday, May 10, 2007

வாசம்

மண்தொட்ட நாட்களில் சுவாசத்தில் தாய்ப்பால் வாசம்
முகமெங்கும் முட்டிமோதும் அம்மாவின் மஞ்சள் வாசம்

ஊருக்கு போகையில் அருகில் அப்பாவின் முரட்டுகதர் வாசம்
ஊரெல்லாம் பேசும் அடுத்த வீட்டு "பாயின்" அத்தர் வாசம்

பள்ளியில் வகுப்பெங்கும் வீசும் டீச்சரின் பவுடர் வாசம்
எப்போதாவது ஞாபகம் வரும் தாத்தாவின் புகையிலை வாசம்

"டொக் டொக்" சத்தமாய் கலைக்கும் பாட்டியின் வெத்திலை வாசம்
சரசர வென்று வளைய வரும் அத்தையின் புதுப்புடவை வாசம்

மனசெல்லாம் சாரலடிக்கும் வானத்தின் மழை வாசம்
மகிழ்ச்சியாய் சிரித்து வரும் குழந்தையின் மழலை வாசம்

பிரித்தவுடன் தவழ்ந்து வரும் புத்தகத்தின் பழைய வாசம்
பிரிந்தவுடன் காற்றிலடிக்கும் நண்பர்களின் சிகரெட் வாசம்

முன்சீட்டில் முகம் தெரியாத பெண்ணின் விநோத வாசம்
எதிர்பாராமல் இடித்துப்போகும் தேவதையின் வியர்வை வாசம்

மாதமுதல் தேதியில் வரும் மஞ்சத்தின் மல்லிகை வாசம்
முத்தம் கொடுக்கும் போது வீசும் மூச்சில் முகவாசம்

மார்கெட் தெருவில் மனைவியுடன் சுமந்திருக்கிறேன் மளிகை வாசம்
மனசெங்கும் மின்னலடிக்கும் அந்த மாத "பட்ஜெட்" வாசம்

ஆயிரம் நிகழ்ச்சிகளில் அவசரமாய் அடித்துப்போகும் "துக்க" வாசம்
ஆனாலும் என் வசமாய் அவளிருந்தால்
எனக்கும் பிடித்திருக்கும் இரவின் நிலா வாசம்

எத்தனையோ வாசங்கள்
இதயத்தின் வசந்தங்களில்!
வசந்தத்தின் வழிநடப்பில்
இறந்த பின்பும் நான் சுவாசித்திருப்பேன்
ஆம்
மண்வாசத்தை!!!

2 Comments:

At 2:29 AM, Blogger Unknown said...

evvan kalapiyen munai thedi allayum
valipokan alla..........
kalam pala kanda kavithai veeran.

vallthukeran vanuyara.......

en nanpan enpathal perumaiyudan....
M.RAJKUMAR.ME.,
Technologist.

 
At 4:06 PM, Blogger U.P.Tharsan said...

nice one

 

Post a Comment

<< Home