Tuesday, May 22, 2007

பிஞ்சுகள்

கருக்கல்ல எந்திருச்சு சோம்பல் முறிச்சா சொடக்கு வந்துரும்
ஓலப்படல்ல ஒண்னுக்கு போகீலயே நொண்டியோட சத்தமும் வந்திரும்
அவங்கூட குட்டைக்கு போனா காத்தால “வேல”யும் முடுஞ்சுடும்
கவிச்சிதீர குளிச்சுட்டு வந்தா சூரியனும் வானத்துல தெரிஞ்சுடும்

அந்நேரத்துக்கே அம்மாவும் தூக்கு போசில சோறுபோட்டு வெச்சிடும்
தின்னு திங்காம ஓடினா அஞ்சு நிமிச முன்னாடியே சங்கு ஊதிடும்
கும்பலாப் போவோம் என்னாட்ட வயசுப்பசங்க எல்லோரும்
முப்பது ரூவா கூலின்னு கொடுக்கறாங்க ஒவ்வொரு நாளைக்கும்

வேலையின்னு ஒக்காந்துட்டா வெரலெல்லாம் நடுக்க(ம்) எடுத்திடும்
நேரங் கொஞ்ச போனாலே பசியும் வயத்த கிள்ளிடும்
பதினோரு மணி வாக்குல மதியச்சோறு மணி அடுச்சுடும்
சோறு வயத்த நெறைக்குதோ இல்லையோ தண்ணி நெறச்சுடும்

சோத்துவேள முடுஞ்சு போனா முதுகெலும்பு முறிஞ்சுடும்
முகமெல்லா வேர்வத் தண்ணி கொத்தா பூத்து வழிஞ்சுடும்
எப்படியோ பல்லக் கடுச்சுக்கிட்டா வேல நேரமும் முடுஞ்சுடும்
வெளிய வரீலயே முப்பது ரூவாக் காசும் கையில கெடச்சிடும்

நேத்து நைட்டு வாங்குன பத்து ரூவாய நொண்டிக்கு கொடுக்கணும்
தங்கச்சிக்கு மறக்காம பஞ்சு முட்டா ரெண்டு வாங்கணும்
மீதிக்காச போன உடனே அம்மா கையில வெச்சிடனும்
இல்லாட்டி அப்பனும் அதப்புடுங்கி தண்ணி அடிச்சுடும்

சோக்காளிகளோட பேசிட்டு இருந்தம்னாலே சாயந்தரம் ஆயிடும்
சூரியனும் சாஞ்சுட்டா மனசுல எப்படியோ சந்தோசம் பூத்துடும்
ரவைக்கு அம்மாவும் சூடாக் கஞ்சி காச்சி வெச்சிடும்
குடுச்சுட்டு படுத்தா தூக்கமும் கண்ணு ரெண்டக் கவுத்துடும்

எல்லோரும் கூப்பிடறாங்க என்ன முருக சாமியின்னு
வர்ற சித்தரையோட எனக்கும் வயசாகுது பதினொன்னு!

-- மார்ச் ‘99

0 Comments:

Post a Comment

<< Home