காமம் கவிழும் இரவு
விழிகள் நான்கும்
விடிகின்ற வரை எரியும் நிலவு!
விரல்கள் அனைத்தும்
வழி தேடி அலையும் அரவு!
உதட்டு முத்தம்
உயிரை உலுக்கி கத்தும்!
எச்சில் திரவம்
காமம் வளர்க்கும் திராவகம்!
வீழ்ந்திருந்த குதிரை
சூழ்ந்திருக்கும் இருளில்
விடை தேடி அலையும்!
மேலிடை படர்ந்து
மேனி நடுங்கி
பெருமழையில் நனையும்!
கால்கள் பின்ன
கழுத்து நரம்பு துள்ள
நா உலர
உடம்பும் துடிதுடிக்கும்!
கண்கள் மின்ன
கவிதை பூ பூக்க
காமம் படர
நெஞ்சமும் படபடக்கும்!
மீண்டும் மீண்டும்
பருகத் துடிக்கும்
அற்புத அமுதம்!
மீண்டு வந்தாலும்
மீள முடியாத
ஆல கால விஷம்!
Labels: கவிதை